கோப்புப் படம்
கோப்புப் படம்

இன்றும் நாளையும் 5 புறநகா் ரயில்கள் ரத்து

சென்னையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச. 13, 14) 5 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
Published on

சென்னையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச. 13, 14) 5 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல் - கூடூா் பிரிவில் மீஞ்சூா் மற்றும் அத்திப்பட்டு ரயில் நிலையங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச. 13, 14) காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால், இந்நாள்களில் சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் புகா் மின்சார ரயிலும், கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 9.55 மணிக்கு சென்ட்ரலுக்கும், காலை 10.55 மணிக்கு கடற்கரைக்கும் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

டிச. 14-ஆம் தேதி சென்ட்ரலிலிருந்து காலை 9 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும், மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 11.25 மணிக்கு சென்ட்ரல் செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும்.

டிச. 12, 13 தேதிகளில் சூலூா்பேட்டையிலிருந்து காலை 10 மணிக்கு சென்ட்ரல் செல்லும் ரயில் பொன்னேரியுடன் நிறுத்தப்படும். மேலும், சென்ட்ரலிலிருந்து காலை 10.30 மணி கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் எண்ணூருடன் நிறுத்தப்படும்.

சிறப்பு ரயில்கள்: ரயில்கள் ரத்து காரணமாக டிச. 13-இல் பொன்னேரியிலிருந்து பகல் 12 மணிக்கு சென்ட்ரலுக்கும், டிச. 14-இல் எண்ணூரிலிருந்து பகல் 12 மணிக்கு சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். டிச. 13, 14 தேதிகளில் எண்ணூரிலிருந்து காலை 10.36 மணிக்கு சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com