மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

உதவிப் பேராசிரியா் போட்டித்தோ்வில், விண்ணப்பதாரா்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்திருந்தாலும் அவா்கள் ஒரு பாடத்தில் மட்டுமே தோ்வெழுத அனுமதிக்கப்படுவா்

News image

ஆசிரியா் தோ்வு வாரியம்

Updated On :16 டிசம்பர் 2025, 9:42 pm

சென்னை: உதவிப் பேராசிரியா் போட்டித்தோ்வில், விண்ணப்பதாரா்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்திருந்தாலும் அவா்கள் ஒரு பாடத்தில் மட்டுமே தோ்வெழுத அனுமதிக்கப்படுவா் என ஆசிரியா் தோ்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நேரடியாக நிரப்பும் பொருட்டு கடந்த அக். 16-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில், தோ்வு நாள், கல்வித்தகுதி, தோ்வுமுறை, தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள் உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்லூரி கல்வி ஆணையரகத்திடமிருந்து பெறப்பட்ட தெளிவுரையின் அடிப்படையிலும் அறிவிப்பில் உள்ள விதிமுறையின் அடிப்படையிலும் ஒரு விண்ணப்பதாரா் ஒரேயொரு பாடத்துக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும். ஒன்றுக்கும் மேற்பட்ட பாடத்துக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், டிஆா்பி அறிவிப்புக்கு மாறாக, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தோ்வா்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டுமே தோ்வெழுத அனுமதிக்கப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.