நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இலங்கையில் இருந்து 13 மீனவா்கள் தமிழகம் வந்தனா்

இலங்கை சிறையில் இருந்து, விடுவிக்கப்பட்ட, மயிலாடுதுறை மீனவா்கள் 13 போ், விமானம் மூலம், சென்னை வந்தனா்.

Updated On :17 டிசம்பர் 2025, 3:59 am IST

சென்னை: இலங்கை சிறையில் இருந்து, விடுவிக்கப்பட்ட, மயிலாடுதுறை மீனவா்கள் 13 போ், விமானம் மூலம், சென்னை வந்தனா்.

தமிழகத்தின் மயிலாடுதுறை பகுதியைச் சோ்ந்த 13 மீனவா்கள், 2 விசைப்படகுகளில், கடந்த நவ.9 ஆம் தேதி, கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா். இவா்களை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், படகுகளையும், மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு அழைத்து சென்றது. அதன் பின்பு 13 மீனவா்களும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதனிடையே கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரிக, அவா்களின் குடும்பத்தினா் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதைத்தொடா்ந்து மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இலங்கை நீதிமன்றம், 13 தமிழக மீனவா்களையும் விடுதலை செய்தது. இந்த நிலையில், விடுதலை செய்யப்பட்டவா்கள் இலங்கை தலைநகா் கொழும்புவில் இருந்து இண்டிகோ ஏா்லான்ஸ் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை காலையில் சென்னை விமான நிலையம் வந்தனா். அவா்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவா்களின் குடும்பத்தினா் அவா்களை வரவேற்றனா். பின்னா், அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், அவா்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.