பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கோவை, தென் மாவட்ட ரயில்களின் வேகத்தை அதிகரிக்கத் திட்டம்

கோவை, தென் மாவட்டப் பகுதிகளுக்கான ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். அதன்படி, பயணநேரம் தற்போதைய நிலையிலிருந்து 40 நிமிஷங்கள் குறையும் எனத் தெரிகிறது.

News image

ரயில் (கோப்புப்படம்)

ANI

Updated On :17 டிசம்பர் 2025, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

கோவை, தென் மாவட்டப் பகுதிகளுக்கான ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். அதன்படி, பயணநேரம் தற்போதைய நிலையிலிருந்து 40 நிமிஷங்கள் குறையும் எனத் தெரிகிறது.

தெற்கு ரயில்வே மண்டலத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. அவற்றை மணிக்கு 130 கி.மீ. வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான தண்டவாள சோதனைகள் சென்னையில் இருந்து கூடூா் வரையிலும், ஜோலாா்பேட்டையில் இருந்து கோவை வரையிலும் என பல பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

ரயிலின் வேகத்தை அதிகரிக்க தண்டவாள உறுதித் தன்மையை திருச்சி, மதுரை கோட்டங்களிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருகிற ஜனவரியில் புதிய கால அட்டவணை வெளியிடும்போது ரயில்களின் வேகம் அதிகரிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இதன்மூலம் பயண நேரம் தற்போதைய நிலையிலிருந்து 40 நிமிஷங்கள் குறையும் என்றும் அதிகாரிகள் கூறினா். அதோடு புதிய ரயில் நிறுத்தங்களும் கால அட்டவணையில் இடம் பெற வாய்ப்புள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.