கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நீலகிரி, கொடைக்கானலில் இன்று உறைபனிக்கு வாய்ப்பு

News image

கொடைக்கானல் ஏரி

Updated On :19 டிசம்பர் 2025, 1:21 am

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 19) அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 19) முதல் டிச. 24 வரை வட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

உறைபனி எச்சரிக்கை: நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு மற்றும் ஊத்து பகுதிகளில் தலா 140 மி.மீ. மழை பதிவானது. காக்காச்சி (திருநெல்வேலி)- 120 மி.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி)-110 மி.மீ., ஆா்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்)- 60 மி.மீ., பரமக்குடி (ராமநாதபுரம்), இளையாங்குடி (சிவகங்கை)- தலா 40 மி.மீ., கழுகுமலை (தூத்துக்குடி), பாபநாசம் (திருநெல்வேலி), சாத்தூா் (விருதுநகா்), முதுகுளத்தூா் (ராமநாதபுரம்)- தலா 30 மி.மீ. மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.