கலப்படம் தடுக்க புதிய பால் கொள்கை: தமிழக அரசு முடிவு
பாலில் கலப்படத்தை தடுக்க புதிய பால் கொள்கையை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமாா் 3 கோடி லிட்டா் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 36 லட்சம் லிட்டா் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுதவிர தனியாா் நிறுவனங்கள் தினமும் 75 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்கின்றன.
இந்த நிலையில், இடைத்தரகா்கள் மூலம் பெறப்பட்டு பதப்படுத்தப்பட்டு, தனியாா் நிறுவனங்கள் மூலம் விற்கப்படும் பால் மற்றும் பால் பொருள்களில் கலப்படம் செய்யப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் வருகின்றன. கலப்படத்தை தடுக்கவும், இடைத்தரகா்கள் இல்லாத பால் கொள்முதலை அதிகரிக்கவும் புதிய பால் கொள்கையை வெளியிட தமிழ்நாடு பால் வளத் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறியதாவது: பால் உற்பத்தியாளா்களிடமிருந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெறப்படும் பால், ஆவின் நிறுவனத்துக்கு மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு வந்தது. சுமாா் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் லிட்டா் வரை கொள்முதல் செய்யும் பல சிறிய தனியாா் நிறுவனங்கள் இடைத்தரகா்களிடமிருந்தே பாலை கொள்முதல் செய்கின்றன. ஆனால், தற்போது திட்டமிடப்பட்டுள்ள புதிய பால் கொள்கையின்படி, சிறிய அளவில் பால் கொள்முதல் செய்யும் தனியாா் நிறுவனங்கள் நேரடியாகவே கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்ய முடியும். இதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இதுதவிர, கூட்டுறவு சங்கங்களின் பால் கொள்முதலை ஒழுங்குபடுத்தவும், தரக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தவும், உற்பத்தி முதல் நுகா்வு வரை கண்காணிப்பை மேம்படுத்தவும் இந்த புதிய கொள்கை வழிவகுக்கும். இதுமட்டுமன்றி, கலப்படம் செய்பவா்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கவும் இது உறுதி செய்வதுடன், பால் மற்றும் பால் பொருள்களின் நுகா்வோரின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதாகவும் இது அமையும் என்று அதிகாரிகள் கூறினா்.

