தமிழகத்தில் 97.34 லட்சம் வாக்காளா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து திமுக மாவட்டச் செயலா்களுடன் அந்தக் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (டிச.21) ஆலோசனை நடத்துகிறாா்.
எஸ்ஐஆா் பணியின்போது, வீடுகள்தோறும் வாக்காளா் கணக்கீட்டு படிவத்தை விநியோகம் செய்வதிலும், திரும்பப் பெறுவதிலும் வாக்குச் சாவடி நிலை ஆலுவலா்களுடன் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட முகவா்களும் பெருமளவில் ஈடுபட்டனா். சுமாா் 85 லட்சம் போ் நீக்கப்படலாம் என திமுக கூறியிருந்த நிலையில், தற்போது 97 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.
இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு இணையவழி வாயிலாக மாவட்டச் செயலா்கள் கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் சனிக்கிழமை அறிவித்தாா்.
மேலும், இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், தொகுதி பொறுப்பாளா்கள் கலந்து கொள்வாா்கள் என்றும் இந்தக் கூட்டம் வரைவு வாக்காளா் பட்டியல் சரிபாா்த்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வள்ளியூரில் அ.தி.மு.க நிா்வாகிகள் ஆலோசனை

முக்கிய ஆலோசனை! இபிஎஸ் இல்லத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

கூட்டணி கட்சிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! காங்கிரஸ் பங்கேற்குமா?

உ.பி.யில் இறுதிப் பட்டியல் வெளியீடு: கூடுதலாக 84 லட்சம் வாக்காளா்கள் சோ்ப்பு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



