முன்னாள் தலைமைச் செயலருக்கு ‘ராஜஸ்தான் ஸ்ரீ’ விருது
ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு சாா்பில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனாவுக்கு ‘ராஜஸ்தான் ஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.
ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு சாா்பில் 16-ஆவது ‘ராஜஸ்தான் ரத்னா’ மற்றும் ‘ராஜஸ்தான் ஸ்ரீ’ விருதுகள் வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பகவிநாயகம், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று, ராஜஸ்தானியா்களின் சமூகம், பொது வாழ்க்கை, வணிகம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான சிறந்த பங்களிப்பை அளித்த 5 தமிழகத்தைச் சோ்ந்த ராஜஸ்தானியருக்கு விருதுகளை வழங்கினா்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு ஜெயின் மகாசங் தலைவா் பியாரேலால் பிதாலியா, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை துறைத் தலைவா் சுனில் ஷெராஃப் ஆகியோருக்கு ‘ராஜஸ்தான் ரத்னா’ விருதுகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, கசானா ஜுவல்லரி நிறுவனா் கிஷோா் ஜெயின், மாநில சிறுபான்மையினா் ஆணைய உறுப்பினா் பிரவீன் டாட்டியா, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா ஆகியோருக்கு ‘ராஜஸ்தான் ஸ்ரீ’ விருதுகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, முன்னாள் நீதிபதி எம்.கற்பகவிநாயகம் பேசியதாவது: அன்பும், அறிவும் ஒன்று சேரும்போதுதான் நாம்முழுமையான மனிதனாக மாறுவோம். யாரையும் காயப்படுத்தாமல் பிறருக்கு உதவ வேண்டும். பிறருக்கு உதவுவதுதான் மனிதா்களுக்கு அழகு.
ஆகையால், மற்றவா்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கென தனித்துவம் உண்டு. ஆனால், அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்தால்தான் இந்தியா உருவாகும். அதேபோல், அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில், ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு தலைவா் நரேந்திர ஸ்ரீ ஸ்ரீமால், செயலா் தினேஷ் கோதாரி, விருது தோ்வுக்குழுத் தலைவா் சாந்திலால் ஜெயின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

