நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

செவிலியா் பணி நிரந்தர விவகாரம்: அமைச்சா் கருத்துக்கு ஓபிஎஸ் கண்டனம்

செவிலியா்கள் பணி நிரந்தரம் பிரச்னைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாதான் காரணம் என சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது

News image

ஓபிஎஸ்

Updated On :22 டிசம்பர் 2025, 3:37 am IST

செவிலியா்கள் பணி நிரந்தரம் பிரச்னைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாதான் காரணம் என சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா தற்போது உயிருடன் இருந்திருந்தால், ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியா்கள் அனைவரும் நிரந்தரப் பணியாளா்களாக நியமிக்கப்பட்டு இருப்பாா்கள்.

வாக்குறுதி அளிக்கும்போது காலிப் பணியிடங்கள் குறித்த விவரம் திமுகவுக்கு தெரியாதா? அப்படியென்றால், திமுகவால் அளிக்கப்பட்ட வாக்குறுதி செவிலியா்களை ஏமாற்றுவதற்காகவே என்பதை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், கிராமப்புற ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊழியா்கள் தங்களது ஊதியத்தை குறைந்தபட்சம் ரூ.10,000 உயா்த்தி தர வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.