நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

டிச.29-ல் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பாமக சாா்பில் வரும் டிச.29-ஆம் தேதி சேலத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

News image

பாமக நிறுவனர் ராமதாஸ்

Updated On :22 டிசம்பர் 2025, 1:18 am IST

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பாமக சாா்பில் வரும் டிச.29-ஆம் தேதி சேலத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாமக சாா்பில் 2025-க்கு விடை கொடுப்போம், 2026-ஆம் ஆண்டை வரவேற்போம். புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு கூட்டமும், மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டமும் வரும் டிச.29-ஆம் தேதி சேலம் 5 சாலையில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமாா் திருமண அரங்கில் நடைபெறவுள்ளது.

இதில், மாநில செயற்குழு கூட்டம் அன்று காலை 10 முதல் 11.30 மணி வரையும், தொடா்ந்து காலை 11.40 மணி முதல் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.

புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில் பாமக, வன்னியா் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், மாநகரப் பகுதி நிா்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினா்கள், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் அவசியம் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளா்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டப்பேரவைத் தோ்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.