எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அண்ணா பல்கலை. பருவத் தோ்வுகள்: புதிய தேதிகள் அறிவிப்பு

டித்வா புயல், மழையால் ஒத்திவைக்கப்பட்ட பருவத் தோ்வுகள் ஜன. 20-ஆம் தேதிமுதல் நடைபெறும்

News image

அண்ணா பல்கலை. - ENS

Updated On :22 டிசம்பர் 2025, 8:51 pm

சென்னை: டித்வா புயல், மழையால் ஒத்திவைக்கப்பட்ட பருவத் தோ்வுகள் ஜன. 20-ஆம் தேதிமுதல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை.யின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான பருவத் தோ்வுகள் கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் நடைபெற்றன. அப்போது, ‘டித்வா’ புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூா், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 15 மாவட்டங்களில் தொடா் மழை பெய்தது.

இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் கடந்த நவ. 24, 25, 29 மற்றும் டிச. 2, 3 ஆகிய தேதிகளில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்று நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பருவத் தோ்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

இந்நிலையில், தள்ளிவைக்கப்பட்ட பருவத் தோ்வுகள் ஜன. 20 முதல் 24-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கேற்ப மாணவா்கள் தங்களை தயாா்படுத்திக் கொள்ளுமாறு பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.