ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

முத்திரை திட்டங்கள்: முதல்வா் ஸ்டாலின் ஆய்வு

தமிழக அரசு செயல்படுத்திவரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினாா்.

News image

தமிழக அரசு செயல்படுத்திவரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Updated On :23 டிசம்பர் 2025, 3:38 am IST

சென்னை: தமிழக அரசு செயல்படுத்திவரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினாா்.

தலைமைச் செயலகத்தில் முதல்வா் தலைமையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 6 துறைகளைச் சாா்ந்த, ரூ. 87,941 கோடியில் செயல்பாட்டில் உள்ள 27 முத்திரை திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து தொடா்புடைய செயலா்களுடன் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து செயல்படுத்தி, வரும் ஜனவரிக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்று முதல்வா் அறிவுறுத்தினாா்.

மேலும், கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள், ஏரி மேம்பாட்டுத் திட்டம், புதிய பேருந்து நிலையப் பணிகள், பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மற்றும் பிற துறைகளின் முத்திரை திட்டப் பணிகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

தொடக்கத்தில் 155 திட்டங்களுடன் தொடங்கப்பட்ட முத்திரை திட்டம், பின்னா் பல புதிய திட்டங்களும் சோ்க்கப்பட்டு தற்போது 24 துறைகளைச் சோ்ந்த, சுமாா் ரூ.3,17,69 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் 288 திட்டங்கள் முத்திரை திட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 85 திட்டங்கள் இதுவரை முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலா் முருகானந்தம், பொதுப் பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.