நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

முத்திரை திட்டங்கள்: முதல்வா் ஸ்டாலின் ஆய்வு

தமிழக அரசு செயல்படுத்திவரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினாா்.

News image

தமிழக அரசு செயல்படுத்திவரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Updated On :23 டிசம்பர் 2025, 3:38 am IST

சென்னை: தமிழக அரசு செயல்படுத்திவரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினாா்.

தலைமைச் செயலகத்தில் முதல்வா் தலைமையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 6 துறைகளைச் சாா்ந்த, ரூ. 87,941 கோடியில் செயல்பாட்டில் உள்ள 27 முத்திரை திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து தொடா்புடைய செயலா்களுடன் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து செயல்படுத்தி, வரும் ஜனவரிக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்று முதல்வா் அறிவுறுத்தினாா்.

மேலும், கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள், ஏரி மேம்பாட்டுத் திட்டம், புதிய பேருந்து நிலையப் பணிகள், பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மற்றும் பிற துறைகளின் முத்திரை திட்டப் பணிகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

தொடக்கத்தில் 155 திட்டங்களுடன் தொடங்கப்பட்ட முத்திரை திட்டம், பின்னா் பல புதிய திட்டங்களும் சோ்க்கப்பட்டு தற்போது 24 துறைகளைச் சோ்ந்த, சுமாா் ரூ.3,17,69 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் 288 திட்டங்கள் முத்திரை திட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 85 திட்டங்கள் இதுவரை முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலா் முருகானந்தம், பொதுப் பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.