பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அரையாண்டுத் தோ்வு இன்று நிறைவு: நாளைமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு இன்றுடன் நிறைவு

News image

அரையாண்டுத் தோ்வு எழுதும் மாணவிகள்.

Updated On :22 டிசம்பர் 2025, 9:54 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் (டிச. 23) நிறைவு பெறவுள்ள நிலையில், புதன்கிழமை முதல் ஜன. 4 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான அரையாண்டுத் தோ்வு கடந்த டிச. 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அனைத்து வகுப்புகளுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை நிறைவு பெறவுள்ளன. இதையடுத்து பள்ளிகளுக்கு டிச. 24 முதல் ஜன. 4 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜன. 5-ஆம் தேதி (திறக்கப்படவுள்ளன.