இடம்பெயர்ந்தோர் 66.44 லட்சம் நீக்கம்! சேர்க்க வந்திருப்பதோ வெறும் 1.68 லட்சம் விண்ணப்பம்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,68,825 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.

கோப்புப்படம்
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி இதுவரை 1,68,825 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) கடந்த நவ.4-ஆம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
அவர்களில் முகவரி மாறிய, இடம்பெயர்ந்த வாக்காளர்கள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கடந்த 19-ஆம் தேதி முதல் ஜன. 18 வரை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி கடந்த டிச.19 முதல் புதன்கிழமை (டிச.25) வரை 1,68,825 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இடம்பெயர்ந்தவர்களாக 66,44,881 பேர் நீக்கப்பட்டபோதிலும் பெயர்களைச் சேர்க்க கடந்த 6 நாள்களில் 1,68,825 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

வரைவு வாக்காளா் பட்டியலில் உள்ள பெயருக்கு ஆட்சேபம் தெரிவிக்கவோ அல்லது நீக்கவோ கோரும் படிவம்-7-க்கு இதுவரை 1,211 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிறப்பு முகாம்கள்
வார இறுதி நாள்களில் பெயர்களைச் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
தகுதியுள்ள வாக்காளர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் டிச. 27, 28 மற்றும் ஜன. 3, 4 தேதிகளில் (சனி, ஞாயிறு) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
1,68,825 people have submitted applications to have their names added to the voter list.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







