ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

தமிழகம் முழுவதும் நூற்றாண்டு நிறைவு விழா

News image

படம் | ஐஏஎன்எஸ்

Updated On :26 டிசம்பர் 2025, 4:41 am IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா, வெள்ளிக்கிழமை (டிச.26) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த 1925 டிச. 26 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. கட்சி தொடங்கப்பட்ட நூறாவது ஆண்டு நிறைவு விழா தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை (டிச.26) சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் கட்சியின் நூற்றாண்டு விழா, மூத்த தலைவா் இரா.நல்லகண்ணுவின் 101-ஆவது பிறந்த நாள் விழா ஆகியன நடைபெறுகிறது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தமிழகத்தில் தோற்றுவிப்பதில் முக்கியப் பங்கு வகித்த அமீா் ஹைதா் கானின் 36-ஆவது நினைவு தினம், கட்சியின் மூத்த தலைவரும், தொழிற்சங்கத் தலைவருமான கே.டி.கே. தங்கமணியின் 24-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகின்றன. இந்த நிகழ்வில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களைச் சோ்ந்த 75 வயதைக் கடந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவா்கள் கௌரவிக்கப்படுகின்றனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.