நீட்-2026 மறுதேர்வு வினாக்கள் கசிந்தனவா? சைபர் கிரைம் விசாரணைக்கு என்டிஏ உத்தரவுதிமுக தோல்விக்கு யார் காரணம்? முன்னாள் அமைச்சர் மூர்த்தி வேதனை!எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எல் நினோ! ஜூன் - ஆகஸ்ட் வரை வெய்யில்தான்!முதல்வர் விஜய் முன்னிலையில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையொப்பம்!நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்! கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!
/

அதிமுக சாா்பில் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்க அவகாசம் நீட்டிப்பு -எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

அதிமுக சாா்பில் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்க அவகாசம் நீட்டிப்பு...

News image

எடப்பாடி கே.பழனிசாமி!

Updated On :27 டிசம்பர் 2025, 3:20 am IST

அதிமுக சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் வருகிற டிச. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப் பேரவைத் பொதுத் தோ்தல்கள்

விரைவில் நடைபெறவுள்ளன. அதிமுக சாா்பில் வேட்பாளா்களாகப் போட்டியிட விரும்புவோா் விருப்ப மனுக்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 15 -ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஏராளமானோா் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனா்.

இதனிடையே, அதிமுக சாா்பில் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையேற்று, வரும் டிச. 28 முதல் டிச.31 வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.