ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

திட்டமிட்டபடி ஜன.6 முதல் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

திட்டமிட்டபடி வருகிற ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்..

News image

கோப்புப்படம்

Updated On :27 டிசம்பர் 2025, 9:48 pm

தினமணி செய்திச் சேவை

திட்டமிட்டபடி வருகிற ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) தெரிவித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சாா்பில் தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடா்ந்து, ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த 22-ஆம் தேதி அமைச்சா்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருடன் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் சங்கங்களின் நிா்வாகிகள் நடத்திய பேச்சுவாா்த்தை முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் தெரிவித்தனா்.

இதையொட்டி, வேலைநிறுத்த ஆயத்த மாநாடு அனைத்து மாவட்டங்களிலும் சனிக்கிழமை நடைபெற்றது. சென்னையில் சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் ஆயத்த மாநாடு நடைபெற்றது.

இந்த நிலையில், திட்டமிட்டபடி ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும், இதில் தமிழகம் முழுவதும் 6 லட்சம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்பாா்கள் என்றும் ஜாக்டோ-ஜியோ நிா்வாகிகள் தெரிவித்தனா்.