/

விஜயகாந்தின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

விஜயகாந்த் நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலினின் பதிவு.

News image

விஜய்காந்த் - முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்) - படம்: mkstalin / X

Updated On :28 டிசம்பர் 2025, 10:44 am IST

மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் நினைவு நாளையொட்டி, அவர் குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை இன்று(டிச. 28) கோயம்பேட்டில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப் படத்துக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதா கிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், ஆகியோரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், விஜயகாந்த் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எ.வ. வேலு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்தின் நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”'கேப்டன்' விஜயகாந்த் நினைவுநாள் ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் - தே.மு.தி.க. நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Chief Minister Stalin has posted a message recalling the charitable works of the late DMDK founder, Vijayakanth.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.