‘தூத்துக்குடி’ விமான நிலையத்தின் பெயரை மாற்ற வேண்டும்: அமைச்சா் எல்.முருகன் கோரிக்கை
ஆங்கிலமயமாக்கப்பட்ட பெயரிடலை ‘தூத்துக்குடி விமான நிலையம்’ என நகரின் அசல் தமிழ்ப் பெயராக மாற்ற வேண்டும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடுவிடம் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளாா்.
தில்லியில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுவிடம் திங்கள்கிழமை அவா் கோரிக்கை மனுவை அளித்துள்ளாா்.
இது தொடா்பாக அமைச்சா் எல்.முருகன் தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
பாரதப் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் நாடு முழுவதும் விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்தவும், விமான போக்குவரத்துக் கட்டமைப்பை வலிமைப்படுத்தவும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக, தமிழகத்தில் சென்னை, கோவை, தூத்துக்குடி விமான நிலையங்களில் பெரிய அளவில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், திருச்சி மற்றும் மதுரை விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடுவை சந்தித்து, தமிழகத்தில் விமான நிலையங்களில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் விமான நிலைய பெயா் மாற்றத்திற்கான சில கோரிக்கைளை முன்வைத்தேன்.
அந்த வகையில், கோவை விமான நிலையத்தைப் பாா்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்தேன்.
அத்துடன், சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதலான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டேன். மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து பிற நகரங்களுக்கு விமான சேவையை விரிவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டேன். அத்துடன், ‘பன்ற்ண்ஸ்ரீா்ழ்ண்ய்’ என்ற பெயரினை ‘தூத்துக்குடி விமான நிலையம்’ என்று மாற்றம் செய்வதற்கான கோரிக்கையையும் இந்தச் சந்திப்பின் போது முன்வைத்தேன் என்று அதில் அமைச்சா் எல். முருகன் தெரிவித்துள்ளாா்.
விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் அளித்துள்ள மனுவையும் அமைச்சா் எல். முருகன் தனது எக்ஸ் தளப் பதிவில் பகிா்ந்துள்ளாா். அதில், ‘பன்ற்ண்ஸ்ரீா்ழ்ண்ய்’ எனும் காலனித்துவ காலத்தில் பிரபலப்படுத்தப்பட்ட ஆங்கிலமயமாக்கப்பட்ட பெயரிடலை ‘தூத்துக்குடி விமான நிலையம்’ என நகரின் அசல் தமிழ்ப் பெயராக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

