திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு! 24 ஆண்டுகளுக்குப் பின்.!

சேவூர் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வைகுண்ட ஏகாதசியையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டதைப் பற்றி...

News image

சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள்.

Updated On :30 டிசம்பர் 2025, 8:43 am IST

அவிநாசி அருகே சேவூர் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வைகுண்ட ஏகாதசியையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் 1000 ஆண்டுகள் பழமையான அவிநாசி அருகே சேவூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வைகுண்ட ஏகாதசியையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Story image

இதேபோல மேலத் திருப்பதி எனப் போற்றப்படும் எனப் போற்றப்படும் மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் அதிகாலை 4 மணிக்கு கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமதே வெங்கடேசப் பெருமாள், வைகுண்டநாதப பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஸ்ரீதேவி, பூதேவி சமதே வெங்கடேசப் பெருமாள் கருட வாகனத்தில் புஷ்ப பல்லக்கில் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Story image

இதில், ஏராளமான பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில், தாளக்கரை லஷ்மி நரசிம்மப்பெருமாள் கோவிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.