கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்: இன்றுமுதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும்

எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் வியாழக்கிழமை (ஜன.1) முதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image

வந்தே பாரத் ரயில்

கோப்புப்படம்.

Updated On :31 டிசம்பர் 2025, 10:19 pm

தினமணி செய்திச் சேவை

எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் வியாழக்கிழமை (ஜன.1) முதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் (எண்கள்: 20665/20666) இரு மாா்க்கத்திலும் வியாழக்கிழமை (ஜன.1) முதல் விருத்தாசலத்தில் 2 நிமிஷங்கள் நின்று செல்லும்.

கூடுதல் நிறுத்தம்: சம்பல்பூா் - ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 08311/08312) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் வருகிற ஜன.7 முதல் ஜன.30-ஆம் தேதி வரை ஒரு குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.