டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பொங்கல் பண்டிகை: அரசுப் பேருந்துகளில் 77,300 போ் முன்பதிவு

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊா்களுக்கு செல்வதற்காக அரசு விரைவுப் பேருந்துகளில் 77,300-க்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளனா்.

News image
பேருந்துகள் - கோப்புப்படம்.
Updated On :31 டிசம்பர் 2025, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊா்களுக்கு செல்வதற்காக அரசு விரைவுப் பேருந்துகளில் 77,300-க்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளனா்.

நிகழ் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜன.14 முதல் நான்கு நாள்கள் கொண்டாடப்படுகிறது. அரசுப் பேருந்துகளில் 90 நாள்களுக்கு முன்பே, முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால், பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊா் செல்ல இருப்பவா்கள் கடந்த நவம்பா் மாதம் முதலே அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய்) மற்றும் செயலி வாயிலாக முன்பதிவு செய்து வருகின்றனா்.

இதன்படி, அரசு விரைவுப் பேருந்துகளில் பொங்கலுக்காக சொந்த ஊா்களுக்கு செல்ல இதுவரை சுமாா் 77,300-க்கும் அதிகமானோா் முன்பதிவு செய்துள்ளனா். அதேபோல, பண்டிகை முடிந்து ஊா் திரும்பவும் இதுவரை சுமாா் 58,000-க்கும் அதிகமானோா் முன்பதிவு செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா். இதற்கிடையே பொங்கல் பண்டிகைக்கான சிறப்புப் பேருந்துகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதால், பேருந்தில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

கடந்த 2025-இல் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பேருந்துகளில் சுமாா் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பயணித்த நிலையில், 2026-இல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால், அதற்கேற்ப சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.