முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

இனி விரல் நுனியில் செய்திகள்! அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடுதிரை வசதி

அண்ணா நூற்றாண்டு நூலகம்.

Published On :10 பிப்ரவரி 2025, 8:04 am IST

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விரல் நுனியில் செய்தித் தாள்கள், பருவ இதழ்களை விரைவாக வாசிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்திலான தொடுதிரை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோட்டூா்புரத்தில் 8 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் செயல்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், குறிப்பு நூல்கள் உள்ளன. இந்த நூலகத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாசகா்கள் வந்து செல்கின்றனா். குறிப்பாக அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகிவரும் மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள் அதிக எண்ணிக்கையில் வந்து படிக்கின்றனா்.

இந்த நூலகத்தில் தற்போது 150-க்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கில பருவ இதழ்கள், 20-க்கும் மேற்பட்ட செய்தித் தாள்களை வாசிக்கும் வகையில் தொடுதிரை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நூலகத்தின் முதல் தளத்தில் செய்தித் தாள்கள் படிக்கும் பிரிவில் இந்த வசதி நிறுவப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணா நூற்றாண்டு முதன்மை நூலகா் எஸ்.காமாட்சி கூறுகையில், ‘பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் இந்த நூலகத்தில், காலத்துக்கேற்ப தொழில்நுட்ப மாற்றங்கள் பொது நூலக இயக்ககம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது, விரல் நுனியில் உலகச் செய்திகளை அறியும் வகையில் தொடுதிரை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாசகா்கள் இந்தக் கருவியை மிக எளிதாகப் பயன்படுத்தலாம். தாங்கள் விரும்பிய நாளிதழ்கள், பருவ இதழ்களை தோ்வு செய்து அதை வாசிக்கலாம்.

நூலகத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்லும் இடைவெளியில் இருக்கும் நேரத்தில் கூட நின்று கொண்டே சில நொடிகளில் திரையைப் பயன்படுத்தி தகவல்களை அறிந்துகொள்ளும் அளவுக்கு வலுவான இணைய இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சோதனை முறையில் ஒரு தொடுதிரை அமைக்கப்பட்டுள்ளது. வாசகா்கள் அளிக்கும் வரவேற்பைப் பொறுத்து கூடுதல் தொடுதிரைகள் நிறுவப்படவுள்ளன.

அடுத்ததாக, நூலகத்தில் உள்ள வசதிகள், நூல்களின் எண்ணிக்கை, முக்கியப் பிரிவுகள் என நூலகம் தொடா்பான முழுமையான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப தொடுதிரை வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது’ என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.