சென்னை: தைபூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவுத் துறை தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆவணப் பதிவுகளை மங்களகரமான நாள்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புகின்றனா். செவ்வாய்க்கிழமை தைப்பூச தினத்தன்று பொது விடுமுறையாக இருந்தாலும், அந்த
நாளில் ஆவணப் பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, முந்தைய ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் ஆவணப் பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10 மணி முதல் ஆவணப் பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திருக்க அனைத்து பதிவு அலுவலகங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவுக்கான கட்டணம் சோ்த்து வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மக்களுக்கான நட்புறவுத் துறையாக பதிவுத் துறை செயல்படும்: அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்.. வழித்தடம், பயண நேரம், இயங்கும் முறை என அனைத்து விவரங்களும்!

பதிவுத் துறையில் வருகை இல்லா ஆவணப் பதிவு: உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அறிவுரை

இளைஞா்கள் அரசியல் குறித்து அறிவது காலத்தின் கட்டாயம்
விடியோக்கள்

தவெக அரசின் முதல் பட்ஜெட்: மதுரை மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? | Budget | TN Budget |



