புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காட்சிப்படுத்தப்பட்ட ஏசி புறநகர் ரயில்! என்ன ஸ்பெஷல்?

பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் ஏசி புறநகர் ரயில் காட்சிப்படுத்தப்பட்டது.

News image

கோப்புப்படம்

Center-Center-Chennai

Updated On :12 பிப்ரவரி 2025, 10:53 am

DIN

சென்னை: சென்னை ஐசிஎஃப் ரயில்வே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஏசி புறநகர் ரயில் இன்று மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஏசி புறநகர் ரயிலில், 1,116 பேர் அமர்ந்தும் 3,796 பேர் நின்றும் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் முதல்கட்டமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இதர ரயில்களை விட வேகமாக செல்லும், கட்டணம் சற்று கூடுதலாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில் சேவையில் முதல் முறையாக ஏசி ரயில்கள் இயக்கப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி, ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணியும் தொடங்கி தற்போது முதல் ரயில் தயாராக உள்ளது. இந்த நிலையில், தெற்கு ரெயில்வேயின் முதல் ஏசி புறநகர் ரயில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னையின் முதல் புறநகா் ஏசி மின்சார ரயில் தயாரிப்புப் பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் அண்மையில் நடத்தப்பட்டது.

ஐசிஎஃப் தொழிற்சாலையில் எல்எச்பி ரயில் பெட்டிகள், வந்தே பாரத் மற்றும் மின் ரயில்களின் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில், மும்பை புறநகா் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் ஏசி வசதியுடன் இயக்கும் வகையிலான பெட்டிகள் ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்படுகின்றன.

இதேபோல், தெற்கு ரயில்வேக்குட்பட்ட சென்னை ரயில்வே கோட்டத்துக்கும் நடப்பு நிதியாண்டில் ஒரு ஏசி மின்சார ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான தயாரிப்புப் பணி ஐசிஎஃப் தொழிற்சாலையில் நடந்து வந்த நிலையில், தற்போது முழுவதுமாக பணி நிறைவடைந்து, மக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பின் எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.