புதுச்சேரி மாநிலத்தின் மதுப்புட்டிகளை நூதன முறையில் உடலில் ஒட்டி கடத்தி வந்தவர் சனிக்கிழமை விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் தனிப்படை உதவி ஆய்வாளர்கள் சண்முகம், சதீஷ் மற்றும் காவலர்கள், சனிக்கிழமை விழுப்புரம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் ரகசிய கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய முறையிலிருந்த நபரைப் பிடித்து, மதுவிலக்கு அமல் பிரிவுக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தியபோது, நூதன முறையில் உடல் முழுவதும் புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்களை ஒட்டிக்கொண்டு, பேருந்தில் விழுப்புரத்துக்கு எடுத்து வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர், விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த பாவாடை மகன் நாகமணி (40) எனத் தெரிய வந்தது. இதையடுத்து 90 மில்லி அளவு கொண்ட 100 மதுப்புட்டிகளும், 150 மில்லி அளவு கொண்ட 25 பிராந்தி மதுப்புட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நாகமணியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பொது சேவை மைய நிா்வாகியிடம் நூதன முறையில் ரூ.40 ஆயிரம் மோசடி
ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்டிக்கா் ஒட்டி பண மோசடியில் ஈடுபட்ட இளைஞா் கைது

முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி கோரி விழுப்புரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



