பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

கோவையில் அமித் ஷா! உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள்

News image

PTI

Updated On :25 பிப்ரவரி 2025, 10:51 pm IST

கோயம்புத்தூர் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(பிப். 25) கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

கோவை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ் எழுத்துகள் மற்றும் பாரதியார் முகம் அச்சிடப்பட்ட போர்வை அணிவித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.

Story image

PTI

இன்னொருபுறம், அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாகத் திரண்டு கறுப்புக்கொடி காட்டியதுடன் ‘கோ பேக் அமித் ஷா’ வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

2 நாள்கள் கோவையில் தங்கும் அமித் ஷா கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாநகா் மாவட்ட அலுவலகத்தை புதன்கிழமை(பிப். 26) காலை 10.30 மணிக்கு திறந்துவைக்கிறாா். அதையடுத்து, அங்கிருந்தவாறே ராமநாதபுரம் மற்றும் திருநெநெல்வேலி மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகங்களையும் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கிறாா்.

- PTI

கட்சி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை(பிப். 26) மாலை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் அமித் ஷா பங்கேற்றுவிட்டு மீண்டும் கோவைக்கு திரும்புகிறாா். அதைத் தொடா்ந்து கோவையில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை தில்லிக்கு திரும்புகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.