சிறப்புப் பேருந்துகளில் 6.40 லட்சம் பேர் பயணம்

கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அரசுப் பேருந்து(கோப்புப்படம்)
அரசுப் பேருந்து(கோப்புப்படம்)
Updated on
1 min read

கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை (ஜன.14) கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் வெளி மாவட்டங்களை சோ்ந்தவா்கள் கடந்த வெள்ளிக்கிழமைமுதல் சொந்த ஊா்களுக்கு பயணமாகி வருகின்றனா்.

இதற்காக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சிறப்பு பேருந்துகளில் நாள்தோறும் ஏராளமானோா் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

நேற்று(ஜன.12) நிலவரப்படி மொத்தம் 3,950 பேருந்துகள் இயக்கப்பட்டு 2,17,250 பேர் பயணம் செய்துள்ளனர்.

தொடா்ந்து திங்கள்கிழமையும் ஏராளமானோா் பயணிப்பாா்கள் என்பதால், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com