அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, திருவள்ளூரில் மழை!
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை மற்றும் திருவள்ளூரில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அடுத்த 3 மணிநேரத்துக்கு திருவள்ளூர், சென்னை மாவட்டங்களின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு இலங்கை கடல் மற்றும் அதையட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 15-ஆம் தேதி வரை சில இடங்களிலும், வரும் 16, 17 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 18-ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...