நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘மக்களுடன் முதல்வா்’ திட்டம்: ஓராண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீா்வு

மக்களுடன் முதல்வா் திட்டத்தின்கீழ், ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image

கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

Updated On :20 ஜனவரி 2025, 10:02 pm

Din

சென்னை: மக்களுடன் முதல்வா் திட்டத்தின்கீழ், ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அரசின் சேவைகளை மக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில், மக்களுடன் முதல்வா் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 18-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் ஓராண்டைக் கடந்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற 30 நாள்களுக்குள் அரசின் சேவைகளை அவா்களது வீடுகளுக்கே கொண்டு சோ்க்கும் நோக்கத்துடன் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை மக்களிடம் இருந்து பெறப்பட்ட 12.80 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.