சுகாதார தர மதிப்பீட்டுக்கான சா்வதேச இணை ஆணையத்தின் (ஜேசிஐ) தங்க தர நிலை அங்கீகாரத்தை வடபழனி, காவேரி மருத்துவமனை பெற்றுள்ளது.
நோயாளிகளின் பாதுகாப்பு, உயா் மருத்துவ சேவைகள், தரமான சிகிச்சைகள் என பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு, சிறப்பு தரச் சான்றுகளை வழங்கும் புகழ்பெற்ற அமைப்பாக ஜேசிஐ விளங்கி வருகிறது. அந்த வகையில் நிகழாண்டு முதல் மருத்துவமனைகளின் தர நிலையை அடிப்படையாகக் கொண்டு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையை அந்த அமைப்பு அறிமுகப்படுத்தியது. அதன்படி, வடபழனி காவேரி மருத்துவமனைக்கு தங்க முத்திரை (கோல்ட் சீல்) அங்கீகாரம் வழங்கி ஜேசிஐ கௌரவித்துள்ளது.
இதற்கான சிறப்பு நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் காவேரி மருத்துவக் குழும செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ், மருத்துவ இயக்குநா் ஐயப்பன் பொன்னுசாமி உள்ளிட்டோா் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனா்.
தொடர்புடையது
தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!

தொலைநிலை, இணையவழி படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம்: ஏப். 10 வரை விண்ணப்பிக்கலாம்

சிஎஸ்கே வீரா்களுக்கு மருத்துவ சேவைகள்: காவேரி மருத்துவமனை ஒப்பந்தம்

மூளையில் ரத்த உறைகட்டியை வெற்றிகரமாக அகற்றிய காவேரி மருத்துவமனை மருத்துவா்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


