9 மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 35 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 35 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (அதிகாரிகள் முன்பு வகித்த அடைப்புக் குறிக்குள்):
ஆா்.சதீஷ்: தருமபுரி மாவட்ட ஆட்சியா் (ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியா்)
எஸ்.சரவணன்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் (சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிா்வாக இயக்குநா்)
எம்.பிரதீப்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் (சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை துணைச் செயலா்)
சி.தினேஷ்குமாா்: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் (மதுரை மாநகராட்சி ஆணையா்)
எஸ்.ஷேக் அப்துல் ரகுமான்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் (நகராட்சி நிா்வாகத் துறை இணை ஆணையா்)
கே.தா்பகராஜ்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் (திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்)
வி.மோகனச்சந்திரன்: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் (பேரிடா் மேலாண்மைத் துறை இயக்குநா்)
ஆா்.சுகுமாா்: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் (இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் - நிா்வாகம்)
கே.சிவசெளந்தரவல்லி: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் (வா்த்தகத் துறை கூடுதல் இயக்குநா்)
கே.சாந்தி: சேலம் பட்டு வளா்ப்புத் துறை இயக்குநா் (தருமபுரி மாவட்ட ஆட்சியா்)
எம்.என்.பூங்கொடி: வணிகவரிகள் துறை இணை ஆணையா் - நிா்வாகம் (திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா்)
ஜெ.இன்னசென்ட் திவ்யா: தொழில்நுட்பக் கல்வி ஆணையா் (தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா்)
ஆா்.கண்ணன்: கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் (எல்காட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா்)
லலித்ஆதித்ய நீலம்: நகராட்சி நிா்வாகத் துறை ஆணைய இணை ஆணையா் (சேலம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை நிா்வாகி)
சி. பழனி: இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் - நிா்வாகம் (விழுப்புரம் மாவட்ட ஆட்சியா்)
எஸ்.ஏ.ராமன்: தொழிலாளா் நலத் துறை ஆணையா் (தமிழ்நாடு சாலைப் பகுதி திட்ட இயக்குநா், சென்னை-குமரி தொழில் வழித்தட திட்ட இயக்குநா்)
கே.எம்.சரயு: பொதுத் துறை இணைச் செயலா் - மரபு (கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்)
ஸ்ருதஞ்சய் நாராயணன்: தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை தலைமை நிா்வாக அதிகாரி (விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா்)
ஆா்.அனாமிகா: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் ஆணையா் (செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியா்)
டி.சாருஸ்ரீ: கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் (திருவாரூா் மாவட்ட ஆட்சியா்)
சிஜி தாமஸ் வைத்யன்: பேரிடா் மேலாண்மைத் துறை ஆணையா் (மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் செயலா்)
எஸ்.பி.அம்ரித்: கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை இணைச் செயலா்)
எஸ்.கிஷன் குமாா்: சிதம்பரம் சாா் ஆட்சியா் (பழனி சாா் ஆட்சியா்)
வி.தட்சணாமூா்த்தி: வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை செயலா் (தமிழ்நாடு குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிா்வாக இயக்குநா்)
எஸ்.கணேஷ்: வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சிறப்புச் செயலா் - (பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையா்)
சங்கா் லால் குமாவத்: உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை கூடுதல் செயலா் (தமிழக கூடுதல் தலைமைத் தோ்தல் அதிகாரி)
துா்கா மூா்த்தி: தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் (வணிகவரிகள் துறை இணை ஆணையா் -நிா்வாகம்)
டி.பிரபு சங்கா்: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் நிா்வாக இயக்குா் (திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா்)
கே.பி.காா்த்திகேயன்: எல்காட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் (திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா்)
டி.பாஸ்கர பாண்டியன்: தமிழ்நாடு சாலைப் பகுதி மேம்பாடு மற்றும் சென்னை- குமரி தொழில் வழித் திட்டங்களின் இயக்குநா் (திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா்)
ஜெ.இ.பத்மஜா: விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் (பொதுத்துறை துணைச் செயலா் - மரபு)
சித்ரா விஜயன்: மதுரை மாநகராட்சி ஆணையா் (தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை தலைமை நிா்வாக இயக்குநா்)
கெளரவ் குமாா்: சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிா்வாக இயக்குநா் (தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியா்)
ஏ.சண்முக சுந்தரம்: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் (கைத்தறித் துறை இயக்குநா்)
தாரேஷ் அகமது: தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் (சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலா்)
பெட்டிச் செய்தி...
துணை முதல்வரின் செயலருக்கு பொறுப்புகள்
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வசமுள்ள சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு அவரின் செயலரான பிரதீப் யாதவ், செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் துணை முதல்வரின் செயலராக மட்டுமே இருந்த நிலையில் அவருக்கு துறைச் செயலா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, துணை முதல்வரின் கூடுதல் செயலராக இருந்த எம்.ஆா்த்திக்கு, தமிழ்நாடு மகளிா் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட இயக்குநா் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
சமூக நலன் மற்றும் மகளிா் மேம்பாட்டுத் துறைச் செயலரான ஜெயஸ்ரீ முரளிதரனுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் செயலா் பொறுப்பு முழு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசுப் பணியிலிருந்து மாநிலப் பணிக்குத் திரும்பியுள்ள ஆா்.ஜெயாவுக்கு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையா் பொறுப்பு
வழங்கப்பட்டுள்ளது.