போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் முதல்வர் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image
நயினார் நாகேந்திரன்
Updated On :4 ஜூலை 2025, 4:04 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் முதல்வர் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை, காவல்துறையை யார் யாரோ தலைமைச் செயலகத்தில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தந்த மாவட்ட எஸ்பி, டிஎஸ்பி என்ன செய்கிறார்கள் என்றால் தலைமைச் செயலத்திற்கு யாரோ போன் செய்து சொல்ல திருபுவனத்தில் அஜித் குமாரை போலீஸார் கடத்திச் சென்று படுகொலை செய்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மிக மோசமான ஒரு சூழ்நிலையில் தினசரி கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அஜித் குமார் கொலை வழக்கில் நீதிபதிகள் நல்ல முறையில் செயல்பட்டு இருக்கிறார்கள். நான் நேரடியாக திருபுவனம் செல்கிறேன், துக்கம் விசாரித்து விட்டு வரலாம் என்று செல்கிறேன். காவல் காக்கக்கூடிய காவலர்களே இப்படிப்பட்ட குற்றங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். முதல்வர் ஈஸியாக சாரி என்று சொல்கிறார். ஏற்கனவே 24 லாக்அப் மரணம் நடந்திருக்கிறது, எதையும் லாக்அப் மரணம் என்று சொல்ல முடியாது, போலீஸாரால் செய்யப்பட்ட படுகொலை என்றுதான் சொல்ல வேண்டும்.

இவை அனைத்திற்கும் முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். முழுமையான நீதி விசாரணை வேண்டும், சிபிஐ நீதி விசாரணை வேண்டுமென்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நிகிதா பெயரில் 2011 இல் மோசடி வழக்குகள் உள்ளன. தலைமைச் செயலகத்தில் யாருக்கு அவர் போன் செய்தார்? அந்த அதிகாரி யார், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் வரும் 7ஆம் தேதி கலந்து கொள்கிறேன். எல்லா இடங்களிலும் பாஜக நிர்வாகிகள் எல்லோரும் கலந்து கொள்வார்கள்.

இனி எல்லா போராட்டங்களிலும் ஒன்றிணைந்து (அதிமுக, பாஜக) செயல்படுவோம். விஜய்யுடன் கூட்டணி பற்றி என்னால் ஏதும் சொல்ல முடியாது அவர்களுடைய செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதில் அவர்கள் விருப்பபடி முடிவெடுப்பார்கள். தேர்தலுக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கிறது, பாத்துக்கலாம் நல்லதே நடக்கும் என்றார்.

Summary

BJP leader Nainar Nagendran has alleged that the police department in Tamil Nadu is not under the control of the Chief Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.