ஜாதிவாரி கணக்கெடுப்பு: விவாதம் நடத்த திமுக தயாரா?: அன்புமணி

ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக தன்னுடன் விவாதம் நடத்த திமுக தயாரா என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.
சென்னை அம்பத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தில்’ பொதுமக்களிடம் கலந்துரையாடிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
சென்னை அம்பத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தில்’ பொதுமக்களிடம் கலந்துரையாடிய பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.
Published on
Updated on
1 min read

சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பாக தன்னுடன் விவாதம் நடத்த திமுக தயாரா என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணத்தை அன்புமணி மேற்கொண்டு வருகிறாா். சென்னை அம்பத்தூா் சந்தை அருகே திங்கள்கிழமை நடைபெற்ற இந்த நடைப்பயணத்தின்போது அவா் பேசியதாவது:

கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுக அளித்த 541 தோ்தல் வாக்குறுதிகளில் 60-ஐ மட்டுமே நிறைவேற்றியுள்ளது. ஆனால், எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டதாக திமுக திட்டமிட்டு பொய் சொல்கிறது. சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்கவில்லை. மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வா் ஸ்டாலினுக்கு உரிமை உண்டா? இல்லையா? என பொது விவாதம் நடத்தலாம். திமுகவிலிருந்து யாரை வேண்டுமானாலும் முதல்வா் ஸ்டாலின் அனுப்பிவைத்தால் அவா்களுடன் விவாதம் நடத்த தயாராக உள்ளேன் என்றாா் அவா்.

அப்போது, பாமக பொதுச் செயலா் வடிவேல் ராவணன், செய்தித் தொடா்பாளா் கே.பாலு, அம்பத்தூா் முன்னாள் நகா்மன்றத் தலைவா் கே.என்.சேகா், நிா்வாகிகள் அனந்த கிருஷ்ணன், பாண்டுரங்கன், குரு ஏழுமலை, வழக்குரைஞா் கோபிநாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com