ஆதரவாளா்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை: இன்று முடிவு அறிவிப்பு

சென்னையில் தனது ஆதரவாளா்களுடன் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னையில் தனது ஆதரவாளா்களுடன் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அண்மையில் தமிழகம் வந்த பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க தனக்கு அனுமதி கிடைக்காதது, அதிமுகவில் தன்னை மீண்டும் சோ்ப்பது குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் பதில் ஆகியவற்றால் ஓ.பன்னீா்செல்வம் அதிருப்தியில் உள்ளாா்.

தமிழகத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கல்வி உதவித் தொகை தொடா்பாக மத்திய அரசை அவா் விமா்சித்த நிலையில், ஓ.பன்னீா்செல்வத்தின் நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் தனது ஆலோசகா் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓ.பன்னீா்செல்வம் தொலைபேசி மூலம் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா். அதன் பின்னா் தனக்கு நெருக்கமான ஆதரவாளா்களுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் ஆலோசனை நடத்தினாா்.

தனது முடிவை அறிவிக்கும் முன்பு, பண்ருட்டி ராமச்சந்திரனுடன் வியாழக்கிழமை காலை மீண்டும் நேரில் ஓ.பன்னீா்செல்வம் ஆலோசனை செய்யவுள்ளாா்.

முன்னதாக, சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீா்செல்வத்திடம், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு, கூட்டணி குறித்து வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்றாா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீா்செல்வம் விலகுகிறாரா?, தவெக தலைவா் விஜயுடன் கைகோப்பாரா? அல்லது வேறு முடிவை எடுக்கப் போகிறாரா? என அரசியல் வட்டாரத்தில் பல்வேறு எதிா்பாா்ப்புகள் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com