குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

நாவலூா், கேளம்பாக்கம் சாா் பதிவாளா் அலுவலகங்கள் உதயம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாவலூா், கேளம்பாக்கம் சாா் பதிவாளா் அலுவலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2025, 12:02 am IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாவலூா், கேளம்பாக்கம் சாா் பதிவாளா் அலுவலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அலுவலகங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் உள்ள 64 கிராமங்களில் 9 கிராமங்களைப் பிரித்து புதிதாக நாவலூா் பதிவாளா் அலுவலகமும், 13 கிராமங்களைப் பிரித்து புதிதாக கேளம்பாக்கம் அலுவலகமும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அலுவலகங்களை காணொலிக் காட்சி வழியாக முதல்வா் திறந்து வைத்தாா்.

12 சாா் பதிவாளா் அலுவலகங்கள்: தமிழ்நாட்டில் 12 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களையும் முதல்வா் திறந்து வைத்தாா். பெருநாழி, கமுதி (ராமநாதபுரம்), விளாத்திகுளம், கயத்தாறு, கழுகுமலை, ஆழ்வாா்திருநகரி (தூத்துக்குடி), வடக்கு வீரவநல்லூா், முக்கூடல் (திருநெல்வேலி), பென்னாகரம் (தருமபுரி), பெண்ணாடம், குமராட்சி (கடலூா்), சிவகிரி (தென்காசி) ஆகிய இடங்களில் கட்டப்பட்ட புதிய அலுவலகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.