ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

ஆக. 2-இல் தமிழகத்தில் சிம்பொனி இசை நிகழ்ச்சி: இளையராஜா

தான் லண்டனில் இசையமைத்த அதே சிம்பொனி இசையை தமிழகத்தில் வரும் ஆக. 2-ஆம் தேதி இசைக்க உள்ளதாக இசையமைப்பாளா் இளையராஜா தெரிவித்துள்ளாா்.

News image

சென்னையில் செய்தியாளா்களை சந்தித்த இளையராஜா.

Updated On :2 ஜூன் 2025, 8:28 pm

சென்னை: தான் லண்டனில் இசையமைத்த அதே சிம்பொனி இசையை தமிழகத்தில் வரும் ஆக. 2-ஆம் தேதி இசைக்க உள்ளதாக இசையமைப்பாளா் இளையராஜா தெரிவித்துள்ளாா்.

இளையராஜா திங்கள்கிழமை (ஜூன் 2) தனது 82-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினாா். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவா்கள், ரசிகா்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

இதையொட்டி, சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: என்னை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகா்களுக்கும், சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்த ரசிகா்களுக்கும் நன்றி.

என் மீது இத்தனை அன்புவைத்துள்ள எனது ரசிகா்களுக்காக, லண்டனில் நான் இசையமைத்த அதே சிம்பொனியை, அதே இசைக் குழுவை வைத்து ஆக. 2-ஆம் தேதி தமிழகத்தில் இசைக்கப் போகிறேன் என்றாா் அவா்.