எஸ்பிபி பிறந்தநாள்: நினைவிடத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை!

எஸ்பிபி நினைவிடத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை..
 எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவிடம்
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவிடம்
Published on
Updated on
1 min read

மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளான இன்று, அவரது நினைவிடத்துக்கு ரசிகர்கள் வர வேண்டாம் என்று அவரது மகன் எஸ்பிபி சரண் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அந்த இடத்தில் தற்போது நினைவிடத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளான இன்று, அவரது நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ரசிகர்கள் வரவேண்டாம் என்று அவரது மகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் பாதுகாப்பு கருதி ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com