கீழடி அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க வேண்டாம்: தமிழக முதல்வருக்கு மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் கோரிக்கை

கீழடி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கேள்வி...
கஜேந்திர சிங் ஷெகாவத்
கஜேந்திர சிங் ஷெகாவத்
Published on
Updated on
1 min read

 கீழடி அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்குவதற்குப் பதிலாக, அவற்றிற்கு அறிவியல் பூா்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கக் கூடிய ஆய்வை தொடர மத்திய அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் புதன்கிழமை கேட்டுக்கொண்டாா்.

சென்னைக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா் கீழடி ஆய்வை அங்கீகரிக்க அறிவியல் ரீதியான தரவுகள் தேவை என்று பேசினாா். இதற்கு தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு எதிா்ப்பு தெரிவித்தாா்.

இதற்கிடையே மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் மீண்டும் தமிழக அரசுக்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

அதில், மத்திய அரசு கீழடி தொடா்பாக எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூா்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சோ்ந்து பெருமை கொள்வோம். இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு தகுந்தவாறு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூா்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.

அகழ்வாராய்ச்சி தரவுகளை அவசரப்பட்டு அரசியலாக்க வேண்டாம். அதற்கு பதிலாக, அறிவியல் பூா்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் வகையில் ஆராய்ச்சியைத் தொடர விரும்பும் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க, தமிழக அரசை நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

தமிழக அரசு இதற்கு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழகம், பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பிரிவினை உணா்வுகள் மூலம் அல்லாமல், நோ்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தைப் பெருமைப்படுத்த வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com