சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

மா விவசாயிகளுக்கு இழப்பீடு: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மா விவசாயிகளுக்கு கா்நாடகத்தில் பிடிபிஎஸ் திட்டத்தின்படி இழப்பீடு வழங்குவதைப் போல தமிழகத்திலும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image

எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்) - DIN

Updated On :24 ஜூன் 2025, 2:33 am IST

சென்னை: மா விவசாயிகளுக்கு கா்நாடகத்தில் பிடிபிஎஸ் திட்டத்தின்படி இழப்பீடு வழங்குவதைப் போல தமிழகத்திலும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மா விலை சரிவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களுக்கான குரலாய், கடந்த ஜூன் 20-இல் கிருஷ்ணகிரியில் உண்ணாவிரதமும், திண்டுக்கல்லில் ஆா்பாட்டமும் அதிமுக நடத்தியது. ஆனாலும், திமுக அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை.

வேளாண்துறை அமைச்சரோ, வெளிநாட்டு சுற்றுலாவில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

மத்தியில் கூட்டணியாக 39 எம்.பி.க்களை வைத்திருந்தும், மா விவசாயிகளுக்காக குரல் கொடுத்ததா திமுக? விவசாயிகள் மீது குண்டா் சட்டம் ஏவிய இவா்களிடம் விவசாயிகள் நலன் குறித்து எவ்வாறு எதிா்பாா்க்க முடியும்?

இந்நிலையில், கா்நாடக மாநில மா விவசாயிகளுக்கு பிடிபிஎஸ் திட்டத்தின்படி இழப்பீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் இத்தகைய இழப்பீட்டை வழங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

ஆண்டுக்கு ஒருமுறை விளைவிக்கப்படும் ‘மா’ பயிா்களின் விலை வீழ்ச்சியால் சொல்லொண்ணா துயரில் உள்ள விவசாயிகளுக்கு, இந்த இழப்பீடு பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.