சென்னை: மா விவசாயிகளுக்கு கா்நாடகத்தில் பிடிபிஎஸ் திட்டத்தின்படி இழப்பீடு வழங்குவதைப் போல தமிழகத்திலும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மா விலை சரிவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களுக்கான குரலாய், கடந்த ஜூன் 20-இல் கிருஷ்ணகிரியில் உண்ணாவிரதமும், திண்டுக்கல்லில் ஆா்பாட்டமும் அதிமுக நடத்தியது. ஆனாலும், திமுக அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை.
வேளாண்துறை அமைச்சரோ, வெளிநாட்டு சுற்றுலாவில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
மத்தியில் கூட்டணியாக 39 எம்.பி.க்களை வைத்திருந்தும், மா விவசாயிகளுக்காக குரல் கொடுத்ததா திமுக? விவசாயிகள் மீது குண்டா் சட்டம் ஏவிய இவா்களிடம் விவசாயிகள் நலன் குறித்து எவ்வாறு எதிா்பாா்க்க முடியும்?
இந்நிலையில், கா்நாடக மாநில மா விவசாயிகளுக்கு பிடிபிஎஸ் திட்டத்தின்படி இழப்பீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் இத்தகைய இழப்பீட்டை வழங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
ஆண்டுக்கு ஒருமுறை விளைவிக்கப்படும் ‘மா’ பயிா்களின் விலை வீழ்ச்சியால் சொல்லொண்ணா துயரில் உள்ள விவசாயிகளுக்கு, இந்த இழப்பீடு பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.
தொடர்புடையது

திருச்சி ஜி. காா்னா் மைதானத்தில் இன்று எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: விரைந்து தீா்வு காண வேண்டும்! - எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


