
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே சுற்றுலா தலமாக விளங்கும் ஏலகிரி மலையில் கோடை விழா, ஏலகிரி விழா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.
பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு விழா பேருரையாற்றினர். சுற்றுலா துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் விழாவினை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
இதில் எம்.பி-க்கள் சி.என்.அண்ணாதுரை, டி.எம். கதிர் ஆனந்த், எம்எல்ஏ-க்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The summer festival was held on Sunday in Yelagiri Hills
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.