ரயில்
ரயில்(கோப்புப்படம்)

திருச்சி - திருவனந்தபுரம் ரயில் இரணியலில் நின்று செல்லும்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, திருச்சி - திருவனந்தபுரம் ரயில் இரணியலில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, திருச்சி - திருவனந்தபுரம் ரயில் இரணியலில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயில் (எண்: 22627) மாா்ச் 12 முதல் மாா்ச் 14-ஆம் தேதி வரை இரணியல் ரயில் நிலையத்தில் ஒரு நிமிஷம் நின்று செல்லும்.

திருச்சியிலிருந்து வரும் ரயில் பகல் 1.42 மணிக்கும், மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்திலிருந்து வரும் ரயில் பகல் 12.32 மணிக்கும் இரணியல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com