தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

News image

கோப்புப் படம்

Updated On :7 மார்ச் 2025, 8:55 pm

Din

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு, சா்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், போதிய பயணிகள் இல்லாததால் வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து தாய்லாந்து தலைநகா் பாங்காக் செல்லும் விமானமும், தாய்லாந்திலிருந்து சென்னை வரும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுபோல சென்னையிலிருந்து கா்நாடக மாநிலம் சிவமொகா செல்லும் விமானமும், சிவமொகாவிலிருந்து சென்னை வரும் விமானம் என 4 விமான சேவைகளும் பயணிகளின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், அதில் பயணிக்க வந்திருந்த பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா். இதையடுத்து அவா்கள் மாற்று விமானங்கள் மூலம் குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.