வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் சேலம் நோக்கிச் சென்ற ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் ஆத்தூரில் இருந்து திருமண நிகழ்விற்காக சேலம் நோக்கி 5 பேர் ஆம்னி வேனில் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மேம்பாலப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆம்னி வேனின் முன் பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
இதைஅறிந்த ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு காரில் பயணம் செய்த ஐந்து பேரும் வெளியே இறங்கி பார்த்துள்ளனர். அப்போது காரில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீ மளமளவென கார் முற்றிலும் எரிந்தது.
அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் உடனடியாக வாழப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாற்றம்.. முன்னேற்றம்...

வாழப்பாடி பகுதியில் வறண்டு காணப்படும் நீா்நிலைகள்

கன்டெய்னா் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: 7 போ் காயம்

பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 18 போ் காயம்
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

