நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனியை பாதித்திருக்கும் புற்றுநோய் என்ன?

கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனியை பாதித்திருக்கும் புற்றுநோய் பற்றி

News image

ஷிகான் ஹுசைன் - கோப்புப்படம்

Updated On :10 மார்ச் 2025, 12:37 pm IST

கராத்தே மாஸ்டர் என்று அறியப்படும் ஷிகான் ஹுசைனியை ரத்தப் புற்றுநோய் பாதித்திருப்பதாகவும், அவரது வாழ்நாள்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அவரை பாதித்திருக்கும் புற்றுநோய் சாதாரண ரத்தப் புற்றுநோய் மட்டுமல்ல என்றும் அதையும் தாண்டிய ஒரு கொடிய நோயாக ஏபிளாஸ்டிக் அனீமியாவும் தன்னை பாதித்திருப்பதாகவும் அது புற்றுநோயையும் தாண்டிய பெரிய நோயாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவர், கராத்தே கலையில் பெயர் பெற்றவர். வில் வித்தையிலும் சிறந்தவர். உடற்பயிற்சி சம்பந்தமான பல்வேறு சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளவர். திரைப்பட நடிகர். தமிழ்நாடு 'வில்' வித்தை சங்கத்தை ஆரம்பித்து அதன் பொது செயலராகவும் இருந்தவர். மிகவும் பிரபலமான ஷிகான் ஹுசைனி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகி வரும் செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இவரது நேர்காணல் மூலமாக, அவருக்கு பாதித்திருக்கும் நோய் பற்றி வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது. அவர் தன்னை பாதித்திருக்கும் நோய் மிகவும் கொடியது என்றும், அதற்கு சிகிச்சையே கிடையாது. நாள்கள் எண்ணப்பட்டு வருகிறது. ஆனால், மற்றவர்களை போல திடீரென சாகாமல், ஒரு சில நாள்களுக்கு முன்பு சாவது குறித்து அறிந்துகொண்டு, இருக்கும் நாள்களுக்குள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அனைவருக்கும் கூறிவிட்டு, முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள எனக்கு போதிய அவகாசம் கிடைத்திருக்கிறது என்று மரணத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டால் வாழ்நாளே நரகமாகிவிடும் என்ற கூற்றை பொய் என நிரூபிக்க முயலும் வகையில் பேசியுள்ளார் ஹுசைன்.

தனக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண புற்றுநோய் அல்ல, என்று கூறியிருப்பதோடு, பொதுவாக ரத்தப் புற்றுநோய் என்றால், ஒருவரது எலும்பு மஞ்ஜை, புற்றுநோய் செல்களை ரத்தத்தில் உருவாக்கும். அதனை எதிர்த்து உடல் போராடும். ஆனால், எனது நோய் காரணமாக, முற்றிலும் எலும்பு மஞ்ஜை எந்த செல் உற்பத்தியையும் செய்யாது. முழு இயக்கத்தையும் நிறுத்திவிட்டது. இதனால், நான் ஒரு நாள் உயிர் வாழ, இரண்டு பாட்டில் ரத்தம், ஒரு பாட்டில் ரத்த தட்டணுக்களை ஏற்றிக்கொள்ள வேண்டும். இப்படி செய்தால்தான் ஒரு நாளையே தாண்ட முடியும்.

அதைக்கூட தினமும் செய்ய முடியாது. ஒரு சில அல்லது நான்கு முறை மட்டுமே செய்ய முடியும். அதன் பிறகு அதனை நமது உடல் ஏற்றுக்கொள்ளாது. பொதுவாக ரத்தப் புற்றுநோய் பாதித்தால் ஒரு வருடம் உயிர் வாழ்ந்தவர்கள் கூட இருக்கிறார்கள். அது போல இது கிடையாது. இதற்கு ஒரு சிகிச்சைதான், எலும்பு மஞ்சை மாற்று. ஆனால் அந்த சிகிச்சையும் 30 அல்லது 40 வயது வரைதான் செய்ய முடியும், அதற்கு மேற்பட்டவர்களுக்கு பலனளிக்காது என்று சொல்லிவிட்டார்கள். எனவே, சிகிச்சை என்பது இல்லை. இரண்டு வழிகள் எல்லாம் இல்லை, ஒரே வழிதான் அதுதான் மரணம் என்று தனது மரணம் குறித்து பேசியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.