ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு: நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்கோப்புப்படம்.
Updated on
1 min read

ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது, ஜிஎஸ்டி வந்த பிறகு பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது.

முன்பு இருந்த வரியே தற்போது ஜிஎஸ்டியிலும் உள்ளது.

ஜிஎஸ்டி தொடர்பான ஒவ்வொரு தீர்மானமும் அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் தான் மேற்கொள்ளப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு திமுக உரிமை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது.

எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேடுவதை திமுக கைவிட வேண்டும்.

சாதிரீதியான பிரச்னை தமிழகத்தில் இன்றும் உள்ளது. தமிழகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு சாதிய கொடுமைகள் தமிழகத்தில் நடைபெறுகிறது.

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சிப்பது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது.

ஊழல் கூட்டணிக்காரர்கள் எங்கள் கூட்டணி பற்றி பேசினால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com