ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அடகுக் கடையில் 250 சவரன் நகை, 8 கிலோ வெள்ளி திருட்டு!

அடகுக் கடையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருட்டு.

News image
தங்க நகைகள் (கோப்புப்படம்)
Updated On :6 மே 2025, 7:58 am

DIN

அரியலூர்: அரியலூரில் அடகுக் கடையில் 250 சவரன் தங்க நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த பணியாளரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம், வில்வாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விகாஸ்ஜெயின். இவர், அரியலூரில் தங்கி, அங்கு சின்னக்கடைவீதியில் அரிஹந்த் சிவன் பேங்கர்ஸ் என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகளாக அடகுக் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தனது தாயாரை பார்க்க ராஜஸ்தான் சென்றுள்ளார்.

இதற்கிடையே அவர், ராஜஸ்தானைச் சேர்ந்த ஆசாத் லோடா என்பவரை கடைக்கு வேலைக்கு சேர்த்துள்ளார். இக்கடைக்கு வரும் அடகு நகைகளை, உறவினர் கடையான நானேஸ் பேங்கர்ஸ் அடகு கடையிலுள்ள பெட்டகத்தில் வைப்பது வழக்கம்.

அதன்படி, கடந்த 3 ஆம் தேதி பாதுகாப்பு பெட்டகத்தில் நகைகளை வைக்கச் சென்ற கடை பணியாளர் ஆசாத்லோடா மாயமாகியுள்ளார். அவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விகாஸ்ஜெயின், நேரில் வந்து பெட்டகத்தை பார்த்த போது, அதில் இருக்க வேண்டிய 250 சவரன் தங்க நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.5 லட்சம் ஆகியவை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் அரியலூர் நகர காவல் துறையினர், செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.