காஷ்மீரிலிருந்து 38 தமிழக மாணவர்கள் தில்லி திரும்பினர்!

காஷ்மீரில் உயர் கல்வி பயிலும் 38 மாணவர்கள் பத்திரமாக தில்லிக்கு அழைத்து வரப்பட்டனர்
காஷ்மீரிலிருந்து 38 தமிழக மாணவர்கள் தில்லி திரும்பினர்!
PTI
Updated on
1 min read

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரிலுள்ள பாராமுல்லா பகுதியில் அமைந்துள்ள ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த 38 மாணவர்கள் இன்று(மே 11) புது தில்லிக்கு வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் கட்டமாக காஷ்மீரிலிருந்து அடுத்த சில நாள்களில் அழைத்து வரப்படவுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்களும் இங்கு தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப்பின் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரிலும், பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளிலும் சண்டை நீடித்தது. இந்த சண்டை நேற்றிரவு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 4 நாள்களாக காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவியதைத்தொடர்ந்து, அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், அங்கு உயர் கல்வி பயிலச் சென்ற தமிழக மாணவர்களை தமிழகம் அழைத்து வர தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பணித்தது.

இந்த நிலையில், ஜம்முவிலிருந்து தமிழக மாணவர்கள் ரயில் மூலம் தில்லிக்கு இன்று வந்தடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com