புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 20 பேர் காயம்!

பேருந்து மரத்தின் மீது மோதிய விபத்து தொடர்பாக...

News image
Updated On :13 மே 2025, 2:48 am

DIN

தனியார் பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.

வேலூரில் இருந்து நேற்று (மே 12) இரவு ஒடுக்கத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, அணைக்கட்டு அடுத்த மூலைகேட் அருகே செல்லும் போது எதிர்பாராத விதமாக சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சுமார் 20- க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனை அறிந்த பொது மக்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் அணைக்கட்டு அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதில் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் பேருந்தின் ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டியதால் இவ்விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் இவ்விபத்து குறித்து அணைக்கட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.