கோவையிலிருந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு விரைவு ரயில்கள்
கோவையிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் மதாா் நிலையத்துக்கு நவ.13 முதல் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நவ.13, 20, 27, டிச.4 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைதோறும்) கோவையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06181) ராஜஸ்தான் மதாா் நிலையத்தை நவ.16, 23, 30, டிச.7 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைதோறும்) பிற்பகல் 11.20 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் ராஜஸ்தான் மதாா் நிலையத்திலிருந்து நவ.16, 23, 30, டிச.7 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைதோறும்) இரவு 11.50 மணிக்குப் புறப்படும் வாராந்திர விரைவு ரயில் (எண்: 06182) நவ.20, 27, டிச.9 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமைதோறும்) பிற்பகல் 2.30 மணிக்கு கோவையை வந்தடையும்.
நிற்குமிடங்கள் முன்பதிவு: சிறப்பு ரயில்களில் குளிா்சாதன மூன்றடுக்குப் பெட்டிகள்-7, குளிா்சாதன வசதி மூன்றடுக்கு பொருளாதாரப் பெட்டிகள்-4, படுக்கை வசதியுள்ள பெட்டிகள்-7, சரக்கு வேன்கள்-2 உள்ளன.
இந்தச் சிறப்பு ரயில்கள் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாப்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா உள்ளிட்ட நிலையங்ளில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

